Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்… உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசுவேலை –ஸ்டாலின் உறுதி!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (13:02 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் பேரணி நடத்திய போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். சீருடை அணியாத போலீசார் மக்களை நோக்கி சுடும் வீடியோக்கள் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என குரல்கள் எழுந்தன. ஆனால் இப்போது வரை வேலை வழஙக்ப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சியில் அவர்களுகு உடனடியாக அரசு வேலை வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின்  பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments