Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சசிகலா குறித்த வசனத்தை நீக்க தயார்”; லைகா

Arun Prasath
வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:51 IST)
தர்பார் திரைப்படத்தில் இடம்பெற்ற சசிகலா தொடர்பான சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கத் தயார் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயகத்தில் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தர்பார். பல காலம் கழித்து இத்திரைப்படத்தில் ரஜினி போலீஸாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் “காசு இருந்தால் ஜெயிலில் ஷாப்பிங் கூட போகலாம்” என ஒரு வசனம் இடம்பெறுகிறது. அவ்வசனம் சசிகலா குறித்து எழுதப்பட்டதாக சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில் தர்பார் திரைப்படத்தில் இருந்து சசிகலா குறித்த சர்ச்சை வசனத்த நீக்க தயார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தனிப்பட்ட நபரை விமர்சித்தோ, புண்படுத்தியோ எந்த வசனமும் எழுதவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments