Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சசிகலா குறித்த வசனத்தை நீக்க தயார்”; லைகா

Arun Prasath
வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:51 IST)
தர்பார் திரைப்படத்தில் இடம்பெற்ற சசிகலா தொடர்பான சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கத் தயார் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயகத்தில் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தர்பார். பல காலம் கழித்து இத்திரைப்படத்தில் ரஜினி போலீஸாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் “காசு இருந்தால் ஜெயிலில் ஷாப்பிங் கூட போகலாம்” என ஒரு வசனம் இடம்பெறுகிறது. அவ்வசனம் சசிகலா குறித்து எழுதப்பட்டதாக சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில் தர்பார் திரைப்படத்தில் இருந்து சசிகலா குறித்த சர்ச்சை வசனத்த நீக்க தயார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தனிப்பட்ட நபரை விமர்சித்தோ, புண்படுத்தியோ எந்த வசனமும் எழுதவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments