Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேட்டில் லுலு மால் வருகிறதா? தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தகவல்..!

Siva
செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:07 IST)
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட நிலையில் இந்த பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி  திறந்து வைத்தார்.

மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டமைக்கப்பட்டுள்ள இங்கு பல்வேறு வசதிகள் உள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் லுலு மால் அமைய இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர்.

அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த்தகவலை உண்மை என்று நம்பி, அரசியல் கட்சியினர் சிலரும் தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு வீட்டுவசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி  ‘மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது’ என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments