Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா பகுதிக்கு அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: வெதர்மேன் பிரதீப் ஜான்

Mahendran
புதன், 13 நவம்பர் 2024 (13:43 IST)
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறைந்த காற்றழுத்த தாழ்வு தற்போது உள் தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் இருப்பதாக கூறியுள்ளார், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து இருப்பதால் கடலோர பகுதிகளை தவிர, உள் தமிழகம், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை டெல்டா பகுதிக்கு அருகில் உள்ளதாகவும், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை பகுதிகளில் காற்று மொத்தமாக குவிந்துள்ளதாகவும் இதனால் இந்த பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காற்றின் குவியல் கடலோர பகுதியை கடந்து உள் தமிழகத்திற்கு இடம் புகுந்ததால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிகிறது. இன்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்,


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments