Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கரை கடப்பது எங்கே?

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கரை கடப்பது எங்கே?

Siva

, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (08:00 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி விட்டதாகவும் இது கரை கடப்பது எங்கே என்பது குறித்தும் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

 இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு தாழ்வு அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அதன்பின்னர் ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களிலும் ஒடிசா மாநிலத்திலும் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!