Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் லாட்டரி விற்பனை படுஜோர்.! ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது..!!

Senthil Velan
செவ்வாய், 28 மே 2024 (13:56 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
 
திண்டிவனத்தில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்  கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை  செய்தனர். அவர்கள் முன்னுககு பின் முரணாக பதில் அளித்தனர். 
 
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது அவர்கள்,
செங்கல்பட்டு  அடுத்த மதுராந்தகத்தைச் சேர்ந்த பாலாஜி, மனோ, செல்வம் என்பதும், இவர்கள் மூன்று பேரும் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 
 
இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ஐந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Lottery sale, 3 people arrested, police action

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments