Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயர்.. ரயிலை கவிழ்க்க சதியா?

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (10:43 IST)
ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பொதுமக்கள் மீளாத நிலையில் திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயர் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மேலவாளாடி என்ற பகுதியில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைக்கப்பட்டதாக தகவல் வெளியானதை எடுத்து உடனடியாக காவல்துறை சென்று லாரி டயரை அப்புறப்படுத்தினர். 
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் மூன்று பேரை  சந்தேகம் அடைந்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதீப் குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் இது குறித்து தீவிரல் விசாரணை நடத்த உத்தரவு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments