Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மோட்டார் வாகன சட்டம் – லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் !

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (09:27 IST)
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் அதிக அபராதம் விதிக்கப்படுவதை அடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தத்தை அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய மோட்டார் வாகன சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விதி மீறலில் ஈடுபடுவோர்க்கு முன்னர் இருந்த அபராதத் தொகையை விட 10 மடங்கு அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. உதாரணமாக லாரி ஓட்டுனர் ஒருவருக்கு 86,000 ரூபாய் அபராதமும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் லுங்கி அணிந்து ஓட்டியதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதும் பரவலாக கண்டனங்களை எழுப்பியுள்ளன.

ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் லாரி உரிமையாளர்கள் இப்போது இந்த அபராதங்களால் மேலும் கஷ்டங்களை அனுபவிப்பதாகக் கூறி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 45 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments