Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு??

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (13:23 IST)
தற்போதைய தகவலின் படி தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 10 ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு எதிர்வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரி 35 ஆயிரமாக உள்ளது.
 
இதனால் இந்த இரண்டு வார ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு குறித்து நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
அவர்களது ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய தகவலின் படி மிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே ஒரே வழி என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments