நாங்க ரொம்ப கறார் ... சென்னையை கட்டுக்குள் வைத்திருக்கும் போலீஸ்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (11:30 IST)
ஊரடங்கு நடைமுறைகளின்படி, சென்னையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
ஆம், தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு கடந்த 24 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் தளர்வில்லா முழு ஊரடங்கு 2 ஆம் கட்டமாக இன்று முதல் 7 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது. 
 
ஊரடங்கு நடைமுறைகளின்படி, சென்னையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என தனித்தனியே வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு, ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
 
அத்தியாவசிய தேவைகள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் சாலைகள் மற்றும் வாகனங்களில் சுற்றுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments