Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடிவடைகிறது ஊரடங்கு உத்தரவு: மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?

முடிவடைகிறது ஊரடங்கு உத்தரவு: மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?
, புதன், 28 அக்டோபர் 2020 (07:43 IST)
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வந்தாலும் கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது
 
இதன் காரணமாக செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயங்குகின்றன, கடைகள் திறக்கப்பட்டுள்ளன, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். இருப்பினும் திரையரங்குகள் உள்ளிட்ட ஒரு சிலவற்றுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை
 
இந்த நிலையில் அக்டோபர் 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மருத்துவர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பில் திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்டிவ் கேஸ்கள் ஒரு லட்சம் மட்டுமே: உலக கொரோனா நிலவரம்