Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹெலிகாப்டர் விபத்து: தீயை அணைக்க உதவிய காட்டேரி கிராம மக்கள்!

ஹெலிகாப்டர் விபத்து: தீயை அணைக்க உதவிய காட்டேரி கிராம மக்கள்!
, புதன், 8 டிசம்பர் 2021 (15:56 IST)
குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் இன்று காலை திடீரென ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் இந்த விமானத்தில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய நிலைமை மனைவியின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது என்றும் இந்த தீயை அணைக்கவே கிட்டத்தட்ட பல மணிநேரங்கள் ஆனதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மீட்பு படையினருக்கு உதவியாக காட்டேரி கிராமத்தில் உள்ள மக்கள் தங்களிடம் உள்ள குடம், வாளி போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு தண்ணீரை கொண்டு வந்து ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை அணைக்க உதவி செய்தார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிருடன் எரிந்தார்கள்: விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி பேட்டி!