Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் உட்பட 22 பேர் சுட்டுக் கொலைபலி

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (20:21 IST)
தென்மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் அப்துல் லதிஃப் ரஷித் தலைமையிலான ஆட்சி நடந்து  வருகிறது. இதன் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள மேற்கு மாகாணமாக அன்பரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக காவல்துறை மற்றும் ராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைடுயத்து,  சம்பவ இடத்திற்கு விரந்து சென்ற ராணுவத்தினர்  அங்கிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு அவர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில்,  ராணுவத்தினர் தாக்குதலே ஓங்கியிருந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட மொத்தம் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இத்தகவலை ஈராக் ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து ஈராக் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் அப்துல்லா லஹாப், 'ருட்பா பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது விமானத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மூத்த ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர் 'என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments