Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (17:11 IST)
ஒரு சில உள்ளூர் விசேஷங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உண்டு என்பது தெரிந்ததே. அவ்வப்போது உள்ளூர் விடுமுறை குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமி அவதார தினம் மார்ச் 4-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அய்யா வைகுண்டசாமி அவர்களை 191 வது அவதார நினைவு தினத்தை ஒட்டி மாநில அரசு அலுவலக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த விடுமுறைக்கு பதிலாக வேறு ஒரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments