Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபரில் அறிவிப்பு: தேர்தல் ஆணையம்

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (11:13 IST)
அக்டோபர் மாத இறுதியில், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த உத்தரவிடக்கோரி உச்சநிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் மனுதாரர் ஜெய் சுகின். கடந்த 2 வருடங்களாக தமிழக அரசு மற்றும், மாநில தேர்தல் ஆணையத்தால் 7 முறை அவகாசம் கேட்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மாநில தேர்தல் ஆணையம் அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை உறுதி செய்து கொண்டு, உச்ச நீதிமன்றம் தற்போது உள்ளாட்சித் தேர்தல் வழக்கை முடித்துவைத்தது. இந்த அறிவிப்பை அடுத்து இனி கால அவகாசம் எந்த நிலையிலும் கேட்க கூடாது எனவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments