Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்..

Arun Prasath
திங்கள், 2 டிசம்பர் 2019 (10:25 IST)
டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் 6 ஆம் தேதி தொடங்கும் எனவும், ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 13 கடைசி நாள் எனவும், வேட்பு மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 18 கடைசி நாள் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments