Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப்பெட்டியை அலேக்காய் திருடிய திருடர்கள்!

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (18:46 IST)
புதுக்கோட்டை அருகே பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மக்கள் பலர் ஆர்வமாக வந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பல இடங்களில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வரும் நிலையில் சில இடங்களில் சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் தேர்தல் நடந்து முடிந்தது. 
 
இந்நிலையில், புதுக்கோட்டை பெரிய முள்ளிபட்டியில் வாக்குசாவடியின் பின்பக்க கதவை உடைத்து வாக்குபெட்டி திருடப்பட்டது. ஆம், பாதுகாப்பிற்கு இருந்த காவலர்களை தள்ளிவிட்டு மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற் அசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இருப்பினும் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு திருடப்பட்ட வாக்குப்பெட்டியை மீட்டனர். மேலும், வாக்குபெட்டியை திருடிச்சென்ற இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments