Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலைச்சரிவில் சாராய பிஸ்னஸ்; பறந்து வந்த போலீஸ் ட்ரோன்! – தெறித்து ஓடிய சாராய வியாபாரிகள்!

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (10:29 IST)
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வியாபாரிகளை பிடிக்க போலீஸார் ட்ரோனை பயன்படுத்தியபோது சாராய வியாபாரிகள் தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது.



சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் சட்டப்படி குற்றம் என்ற நிலை இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சி திருட்டுத்தனமாக விற்கும் கும்பல்கள் சில ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மலைப்பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மலை மேல் சாராயம் காய்ச்சுவதாக கூறப்படும் நிலையில் சோதனைக்கு சென்றால், முன்னதாக மோப்பம் பிடித்து சாராய வியாபாரிகள் தப்பிவிடக் கூடும் என ட்ரோன்களை போலீஸார் பயன்படுத்தியுள்ளனர்.

கேமராவுடன் கூடிய ட்ரோன்கள் பறந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த சாராய வியாபாரிகள் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். விற்பனைக்கு வைத்திருந்த சாராய பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments