Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தென்மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
, வெள்ளி, 3 மார்ச் 2023 (17:32 IST)
கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக  தென்மாவட்டங்களில், நாளைக்கு லேசான மழை பெய்யும் என கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:

3 ஆம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும், சில இடங்களில் இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.

கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக  மார்ச் 4ஆம் தேதி, 5 ஆம் தேதிகளில், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்யக்கூடும்! சில இடங்களில்  குறைந்தபட்ச வெப்பநிலை  இயல்பை விட  3 முதல் 4 டிகிரி குறைவாக இருக்கும்.

வரும் 6 ஆம் தேதி தமிழகம், காரைக்கால் பகுதிகளில் பொதுவான வறண்ட வானிலை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைப்பு: ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு..!