Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்றி எரிந்த LIC பில்டிங்: சாம்பலான முக்கிய ஆவணங்கள்!

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (11:07 IST)
சென்னை எல்ஐசி கட்டிடத்தில் இன்று காலை 5 :30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று காலை 5 :30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எல்ஐசி கட்டிடத்தின் நான்காவது மாடியில் பற்றிய தீயானது மற்ற இடங்களுக்கும் பரவ துவங்கியுள்ளது. 
 
இதனால் விரைந்து வந்த தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய இடங்களின் 7 தீயணைக்கும் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. 
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்புதுறையினர். இந்த விபத்தில் எல்ஐசி-யின் 5 வது மாடியில் உள்ள பல முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன. 
 
விபத்து குறித்து போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ பற்றியது என தெரியவந்துள்ளது. மேலும் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments