Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்தம் தெளிய எலுமிச்சை பழம்; அறிவு வளர்க்க திருக்குறள் : சித்தராமையாவுக்கு பார்சல்

சித்தம் தெளிய எலுமிச்சை பழம்; அறிவு வளர்க்க திருக்குறள் : சித்தராமையாவுக்கு பார்சல்

சித்தம் தெளிய எலுமிச்சை பழம்; அறிவு வளர்க்க திருக்குறள் : சித்தராமையாவுக்கு பார்சல்
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (12:41 IST)
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக மதுரை இந்து மக்கள் பேரவையினர் வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 

 
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பாக, டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும், தண்ணீர் தர முடியாது என்று கையை விரித்து விட்டார் சித்தராமையா. அதனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
 
இந்நிலையில், கர்நாடக அரசின் செயல்பாடுகளை கண்டித்து மதுரை இந்து மக்கள் பேரவையினர் வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதாவது, தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் சித்தராமையாவின் சித்தம் தெளிய எலுமிச்சை பழங்களையும், அறிவை வளர்க்க திருக்குறள் புத்தகத்தையும் அவருக்கு பார்சலில் அனுப்பி வைத்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்: சீனா திட்டம்