Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ராமராஜன் மீது காவல் துறையினர் வழக்கு

Webdunia
திங்கள், 23 மே 2016 (11:01 IST)
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக நடிகர் ராமராஜன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

 
அரவக்குறிச்சி தொகுதியில் பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகம் காரணமாக எழுந்த புகார்களை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் 13ம் தேதி தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் மே 18 அன்று அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் தென்னிலை பகுதியில் உரிய அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
இதுகுறித்து அரவக்குறிச்சி தேர்தல் பறக்கும்படை அலுவலர் உலகநாதன் கொடுத்த புகாரின்படி, தென்னிலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாயமான அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு.. பயணம் செய்த 10 பேரும் உயிரிழப்பு..!

படிக்காதவர்களையும், படித்து பட்டம் பெற்றவர்களையும் திமுக அரசு ஏமாற்றுகிறது: கடம்பூர் ராஜு

மீண்டும் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.. அதிமுக, பாஜக ஓட்டு கிடைக்கவில்லையா?

மீண்டும் 14 தமிழகம் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்..!

கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments