Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் ராமராஜன் மீது காவல் துறையினர் வழக்கு

Advertiesment
நடிகர் ராமராஜன் மீது காவல் துறையினர் வழக்கு
, திங்கள், 23 மே 2016 (11:01 IST)
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக நடிகர் ராமராஜன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

 
அரவக்குறிச்சி தொகுதியில் பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகம் காரணமாக எழுந்த புகார்களை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் 13ம் தேதி தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் மே 18 அன்று அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் தென்னிலை பகுதியில் உரிய அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
இதுகுறித்து அரவக்குறிச்சி தேர்தல் பறக்கும்படை அலுவலர் உலகநாதன் கொடுத்த புகாரின்படி, தென்னிலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு!