Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லலிதா நகைக் கடை கொள்ளை : திருட்டுக் கும்பலின் தலைவன் 'எய்ட்ஸ் நோயாளி'!

Advertiesment
லலிதா நகைக் கடை கொள்ளை : திருட்டுக் கும்பலின் தலைவன் 'எய்ட்ஸ் நோயாளி'!
, வெள்ளி, 4 அக்டோபர் 2019 (14:07 IST)
திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகை திருட்டில் ஈடுபட்ட ஒருவர் சிக்கியுள்ளான். அவனிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருட்டுக் கும்பலின் தலைவன் எயிட்ஸ் நோயாளி என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் யாராக இருக்கும் என போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 
நேற்று இது தொடர்பாக 6 வடமாநிலத்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்த நிலையில், தற்போது உண்மையான குற்றவாளி சிக்கியுள்ளான். ஆம், திருவாரூரில் வாகன தணிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு  நபரிடம் சோதனை செய்தனர். அப்போது அந்த நபரிடம் 5 கிலோ தங்க நகைகள் இருந்துள்ளது. அந்த நகைகளின் பார்கோடை சோதனை செய்ததில் அது லலிதா ஜுவல்லரியில் திருட போன நகைகளின் பார்கோடுடன் ஒத்துபோனது. இதனால், அந்த நபரை கைது செய்தனர். அவன் திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்துள்ளது. 
 
இவனுடன் திருடிய இன்னொருவன் சீராத்தோப்பு சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. சுரேஷை போலீஸார் தேடி வருகின்றனர். மணிகண்டனிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த 5 கிலோ தன்னுடைய பங்கு அதை பெற்றுக்கொண்டு வந்த போது சிக்கிவிட்டேன் என தெரிவித்துள்ளான். மணிகண்டனிடம் இருது 5 கிலோ நகை மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், இந்த திருட்டுக் கும்பலுக்கு தலைவனாகச் செயல்பட்டவன் முருகன். இவன்,பல்வேறு திருட்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டுவருபவன். இந்த திருட்டுக்கு முருகன் முக்கியக் காரணம் என தெரிகிறது. 20 வருடங்களாக இந்த திருட்டில் ஈடுபட்டு வரும் முருகன், போலீஸில் சிக்காமல் இருக்க காரில் சுற்றுவானாம்.அப்படி திருடிய நகைகளை நாகப்பட்டிணத்தில் உள்ள ஒருவரிடம் விற்றுவிட்டுவான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில்,இன்னொரு முக்கியமான விஷயம்  முருகனுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ளது. அவன் இரு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இந்த நகைத் திருட்டு சம்பந்தமாக 7 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று வரை பிச்சைக்காரி; இன்று கோடீஸ்வரி! – லெபனானை அதிரவைத்த பாட்டி!