Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சாக்லேட் திருடிய பெண் காவலர் சஸ்பெண்ட்

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (12:04 IST)
சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள பிரலமான சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க  வேப்பேரி காவல் நிலைய பெண் காவலர் ஒருவர் சென்றிருந்தார். அங்கு அவர் பொருட்களை எடுத்து கொண்டிருந்தபோது சாக்லேட்கள், ஓடோமாஸ் ஆகியவற்றை திருடியதாக தெரிகிறது. உடனே அந்த சூப்பர் மார்க்கெட்டின் சிசிடிவி மூலம் இந்த திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தான் பொருட்களை திருடியதை அந்த பெண் காவலர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெண் காவலர் தனது கணவர் மற்றும் சிலருடன் வந்து சூப்பர் மார்க்கெட் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஊழியர்களை பெண் காவலரின் கணவர் தாக்கிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து காவல்துறை ஆணையரிடம் சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் புகார் அளித்தனர். இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்த சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட் திருடிய பெண் காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். திருடர்களை கண்டுபிடிக்க வேண்டிய காவலர்களே திருடிய விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments