Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோவில் பயணம் செய்ய வந்த கூலித்தொழிலாளர்கள் தடுக்கப்பட்டார்களா?

Mahendran
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (16:52 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் கூலி தொழிலாளர்கள் பயணம் செய்ய வந்தபோது அவர்கள் தடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்தது.
 
இன்று காலை சென்னை மெட்ரோ ரயில் கூலி தொழிலாளர்கள் சிலர் தங்களுடைய வேலைக்கான பொருட்களுடன் மெட்ரோ ரயில் பயணம் செய்ய வந்த போது அவர்கள் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. 
 
இந்த செய்தியை அடுத்து மெட்ரோ நிர்வாகத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்து மெட்ரோ நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளது. 
 
கட்டிட தொழிலாளர்கள் கூர்மையான பொருள்களுடன் வந்தார்கள் என்றும் மெட்ரோ ரயிலில் கூர்மையான பொருட்களுடன் பயணம் செய்ய அனுமதி இல்லை என்பதால் அவர்கள் தடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் கூர்மையான பொருள்களை துணி வைத்து மூடிய பின்னர் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக மதுரை மாநாடு: விஜய் மட்டுமே பேசுவார்.. காவல்துறைக்கு அளித்த தகவல்..!

3 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு..!

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments