Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூலித்தொழிலாளியின் வீட்டுக்கு மின் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக் தகவல்!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (17:31 IST)
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் வீட்டு மின் கட்டணம் 2.92 லட்சம் என வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்குப் பின் இந்த முறை வந்த மின்கட்டணம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தாங்கள் வழக்கமாக கட்டும் மின் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளது. இதற்குக் காரணம் ஊரடங்கால் மக்கள் அதிகமாக வீடுகளில் இருப்பதால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டாலும், அதிகமான மின் கட்டண சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான வீரப்பன் எனும் கூலித்தொழிலாளியின் வீட்டு எண்ணுக்கு கட்டணமாக 2.92 லட்சம் என அதிர்ச்சித் தகவலை மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் புகார் செய்ய, எண்களுக்கு இடையில் புள்ளி வைக்காததால் கணினியில் ஏற்பட்ட கோளாறு எனக் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது மின்கட்டணம் குறித்த சர்ச்சைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments