Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூலித்தொழிலாளியின் வீட்டுக்கு மின் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக் தகவல்!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (17:31 IST)
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் வீட்டு மின் கட்டணம் 2.92 லட்சம் என வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்குப் பின் இந்த முறை வந்த மின்கட்டணம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தாங்கள் வழக்கமாக கட்டும் மின் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளது. இதற்குக் காரணம் ஊரடங்கால் மக்கள் அதிகமாக வீடுகளில் இருப்பதால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டாலும், அதிகமான மின் கட்டண சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான வீரப்பன் எனும் கூலித்தொழிலாளியின் வீட்டு எண்ணுக்கு கட்டணமாக 2.92 லட்சம் என அதிர்ச்சித் தகவலை மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் புகார் செய்ய, எண்களுக்கு இடையில் புள்ளி வைக்காததால் கணினியில் ஏற்பட்ட கோளாறு எனக் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது மின்கட்டணம் குறித்த சர்ச்சைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

விஜய் கூறியதை வரவேற்கிறேன்.. ஆனாலும் ஒரு சந்தேகம்.. திருமாவளவன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments