Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது: எல் முருகன்

Advertiesment
மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது: எல் முருகன்
, திங்கள், 14 டிசம்பர் 2020 (13:29 IST)
கடவுள் இல்லை என்று சொன்னால் இனி மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்பது ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது என பாஜக தமிழக தலைவர் வேல்முருகன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வரும் திமுக கடந்த சில வாரங்களாக கடவுள் குறித்து பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. குறிப்பாக ஆன்மீகம் விவேகானந்தர் போன்ற வார்த்தைகளெல்லாம் திமுக தலைவர் முக ஸ்டாலின் வாயிலிருந்து வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதால் ஆன்மீகம் விவேகானந்தர் என்றெல்லாம் பேசுகிறார். கடவுள் இல்லை என்று இனியும் சொன்னால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது என்று கூறியுள்ளார் 
 
எல் முருகனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் முருகனின் இந்த கருத்துக்கு விரைவில் திமுக தரப்பில் இருந்து பதிலடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை வைத்து பாஜக சினிமா வேண்டுமானால் செய்வார்கள்.. கமல்ஹாசன்