Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசை சௌந்தர்ராஜன் தாயார் மறைவு! – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (09:56 IST)
தெலுங்கான ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜனின் தாயார் மறைவிற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா அளுனரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான தமிழிசை சௌந்தர்ராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். மறைந்த கிருஷ்ணகுமாரி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் துணைவியார் என்பதால் காங்கிரஸ் – பாஜக இருதரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் “தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி. டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் தாயார் திருமதி கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். மறைந்த திருமதி கிருஷ்ணகுமாரி, மூத்த காங்கிரஸ் தலைவர் திரு.குமரி அனந்தன் அவர்களின் துணைவியார் ஆவார். அன்புத் தாயாரை இழந்து வாடும் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments