Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த முட்டாள்களின் குரைப்பை நிறுத்த முடியாது. குஷ்பு கோபப்படுவது யாரை?

இந்த முட்டாள்களின் குரைப்பை நிறுத்த முடியாது. குஷ்பு கோபப்படுவது யாரை?
, ஞாயிறு, 7 மே 2017 (10:48 IST)
நடிகை குஷ்பு சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவ் ஆக இருக்கும் மிகச்சிலரில் ஒருவர். அவ்வப்போது தனது அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பயனாளிகளுடன் பகிர்ந்து கொள்வார். இந்த நிலையில் நேற்று குஷ்புவுக்கு ட்ரோல் மன்னர்களுக்கும் இடையே டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நடந்தது.



 


பின்னர் கடைசியில் குஷ்பு கூறியபோது, 'நான் சாதரணமாக ட்ரோல் செய்பவர்களைக் கண்டுக்கொள்வதில்லை. ஆனால் சமயங்களில் அவர்கள் மொழியிலே அவர்களுக்கு பதிலளித்தால் தான் சரியாக இருக்கும்' என ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

பின்னர் 'இந்த முட்டாள்களின் இயல்பை மாற்றுவது கடினம். நாம் நம் வேலையைப் பார்ப்போம்' என முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார் குஷ்பூ.

நேற்று குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை வைத்து ட்ரோல் மன்னர்கள் குஷ்புவை செமையாக கலாய்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் கால்களை வெட்டியது யார் தெரியுமா?: பொன்னையன் அதிரடி!