எதுக்கு இந்த மன்னாங்கட்டி ஈகோ... காங்.சாருக்கு குஷ்பூ ட்விட்!!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (15:04 IST)
குஷ்பூவின் பதிவு ஒன்றால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் ஒதுக்கப்பட்டுள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது. 
 
குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், மறைந்த எம்பி வசந்தகுமார் படத் திறப்பு விழா நடக்கிறது என எனக்கு யாரும் சொல்லவில்லை. நான் பத்திரிகைகளை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இத்தனைக்கும் நான்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரே தேசிய செய்தி தொடர்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், எப்போதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையை உருவாக்கி, நம்மை வலிமையாக்குவோம் என எனக்குத் தெரியவில்லை. நாம் நமது ஈகோ போன்ற விஷயங்களால் பலவீனமாகிவிடக் கூடாது என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் குஷ்பூவை தமிழக காங்கிரஸ் கட்சியினர் இதுக்குவது அம்பலமாகியுள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த குஷ்பூ, திமுகவில் அவர் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தபோது திடீரென முக ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திமுகவிலிருந்து வெளியேறினார்.  
 
அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ராகுல் காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவராக மாறிய குஷ்பு, சமூக வலைதளங்களிலும் பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். சமீபத்தில் பாஜக அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்வி கொள்கையை ஆதரித்து கட்சிக்குள் சர்ச்சையில் சிக்கினார். 
 
இதனால் தற்போது அவர் ஒதுக்கப்பட்டுள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது. அதோடு குஷ்பூவின் ட்விட் கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments