Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேணும்னு பேசல... தவறான வார்த்தைக்காக மன்னிப்பு கோரிய குஷ்பு !

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (08:25 IST)
மாற்றுத்திறனாளிகள் குறித்த விமர்சனத்திற்கு பாஜகவில் இணைந்துள்ள குஷ்பு மன்னிப்பு கோரியுள்ளார். 
 
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். குஷ்புவின் இந்த திடீர் அரசியல் மாற்றம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதனிடையே காங்கிரஸ் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று குஷ்பு விமர்சித்தார். இந்நிலையில் குஷ்புவின் பேச்சு மாற்றுத்திறனாளிகளை சிறுமைப்படுத்துவது போல உள்ளது என மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புக் கண்டனம் தெரிவித்தது.
 
இதைத்தொடர்ந்து தனது கருத்துக்கு குஷ்பு மன்னிப்பு கோரியுள்ளார். அவசரம், ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். 
 
எனது சொந்த குடும்பத்திலேயே மனநல பிரச்சினையால் போராடினேன். மனச்சோர்வு, இருமுனை கோளாறு போன்றவற்றுடன் வாழும் நண்பர்களைக் கொண்டுள்ளேன் என கூறி மன்னிப்பு கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments