Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாகித்ய அகாதெமியிலும் இந்தி திணிப்பா ? – விருது பெற்ற எழுத்தாளரின் நச் கோரிக்கை !

சாகித்ய அகாதெமியிலும் இந்தி திணிப்பா ? – விருது பெற்ற எழுத்தாளரின் நச் கோரிக்கை !
, செவ்வாய், 18 ஜூன் 2019 (16:00 IST)
சிறந்த மொழிப்பெயர்ப்புக்கான சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் குளச்சல் யூசுப் விருதில் இந்தியில் எழுதியிந்ததைப் பார்த்துத் தமிழில் எழுத வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான திருடன் மணியன் பிள்ளை எனும் நாவல் பெரிதும் கவனத்தை ஈர்த்த ஒன்றாகும். அதைத் தமிழில் எழுத்தாளர் குளச்சல் மூ யூசுப் மொழி பெயர்த்தார். அந்த மொழிப்பெயர்ப்புக்கு சிறந்த மொழிப்பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடெமி விருது அவருக்குக் கிடைத்தது.

அதை இன்று டெல்லியில் இன்று குடியரசுத்தலைவரின் கையால் அவர் பெற்றார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட விருதில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துகளுக்குப் பதிலாக தமிழில் எழுதித்தரப் ப்டவேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் இந்தக் கோரிக்கை சமூக வலைதளங்களில் ஆதரவைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா கலைஞர் மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை : பகீர் சம்பவம்