Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூலிப்படையினரால் தான் ஜெயக்குமார் கொல்லப்பட்டிருப்பார்: கே.எஸ்.அழகிரி அதிர்ச்சி தகவல்..!

Siva
திங்கள், 6 மே 2024 (13:20 IST)
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கூலிப்படையினரால் தான் கொலை செய்யப்பட்டு இருப்பார் என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஜெயக்குமார் திடீரென கடந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது மரணம் குறித்து மர்மம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை கூறி வருகின்றனர். மேலும் அவர் எழுதியதாக கூறிய இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளதை அடுத்து அந்த கடிதங்கள் உண்மையானதானா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு தற்போதைய எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆகியோர்கள் மீது ஜெயக்குமார் அந்த கடிதத்தில் குற்றம் சாட்டிய இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த மரணம் குறித்து விசாரணை செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கூலிப்படையினரால்தான் கொல்லப்பட்டு இருப்பார் என்றும் ஜெயக்குமார் மரணம் வழக்கை காவல்துறை முறையாக விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments