Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (10:34 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக தமிழ் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 20 ஆண்டுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்
 
இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு நேற்று குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியது. இந்த கடிதத்திற்கு குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுத்து 7 தமிழர்களை விடுதலை செய்ய ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் சற்றுமுன் அளித்த பேட்டியில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments