Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (10:34 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக தமிழ் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 20 ஆண்டுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்
 
இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு நேற்று குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியது. இந்த கடிதத்திற்கு குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுத்து 7 தமிழர்களை விடுதலை செய்ய ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் சற்றுமுன் அளித்த பேட்டியில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments