Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனியாவது கைதட்டாமல் தேவையானதை செய்யுங்க - கே.எஸ்.அழகிரி அறிக்கை

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (14:21 IST)
கொரோனா ஊரடங்கால் விவசாயம் மற்றும் விவசாய பொருட்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விளைந்த உணவு பொருட்களை அறுவடை செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “மக்கள் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகள் உறப்த்திசெய்த பொருளை அறுவடை செய்ய முடியவில்லை. ஏற்கனவே அறுவடை செய்ததை எடுத்துச்செல்ல போக்குவரத்து வசதியில்லை. விளைபொருளை வாங்க விற்பனையாளர்கள் இல்லை. ஒட்டுமொத்தமாக விவசாய தொழிலே இன்று முடங்கியிருக்கிறது.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் மோடி மக்கள் ஆதரவு தமக்கு இருப்பதை உறுதிசெய்வதற்காக கைத்தட்ட சொன்னார். விளக்கை அணைத்து, விளக்கை ஏற்ற சொன்னார். இனியாவது மலிவான இத்தகைய அணுகுமுறைகளை தவிர்த்து மக்களை பேரழிவிலிருந்து பாதுகாக்க உரிய செயல்திட்டத்தை பிரதமர் மோடி போர்க்கால அடிப்படையில் அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments