Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிட்டா மிராசுகளுக்கு வாய்ப்பு? அடபோப்பா நீ வேற... ஜெயகுமாருக்கு அழகிரி பதில்!!

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (11:18 IST)
காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் உள்ளது கட்சி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமைச்சர் ஜெயகுமாருக்கு பதில் அளித்துள்ளார். 
 
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளான திமுக - காங்கிரஸ் தங்களுக்குள் தொகுதி பங்கீடு செய்து கொண்டுள்ளன. 
 
அதன்படி விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸும் வேட்பாளரை அறிவித்துவிட்டது.
நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரூபி பில்டர்ஸ் தலைவர் ரூபி மனோகரன் போட்டியிட உள்ளார். இதை விமர்சித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நாங்குநேரியில் அதிமுக சார்பில் சாமானிய தொண்டன் நிறுத்தப்பட்டுள்ளான். ஆனால், காங்கிரஸ் சார்பில் தொகுதிக்கு தொடர்பில்லாத கோடீஸ்வரர் ரூபி மன்கோகரன் நிறுத்தப்பட்டுள்ளார். 
 
காங்கிரஸ் கட்சியில் மிட்டா மிராசுகளுக்குத்தன வாய்ப்பு கிடைக்கும். காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களில் 100 சதவீதத்தில் 90 சதவிதம் பேர் வசதி படைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் என தெரிவித்தார். 
 
இதற்கு பதில் அளித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மிகுந்த வறுமையில் இருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி. அதிமுக போல பணத்தை வாரி இறைக்கும் கட்சி இந்தியாவிலேயே கிடையாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments