Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கர் கொலையில் 6 பேருக்கு தூக்கு: டாக்டர் கிருஷ்ணசாமி, பாலபாரதி கருத்து

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (14:45 IST)
தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து புதியதமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் பாலபாரதி ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:
 
டாக்டர் கிருஷ்ணசாமி: இதுபோன்ற ஆணவ கொலையை தடுக்க இந்த மாதிரி கடுமையான தண்டனைகளுடன் கூடிய தீர்ப்பை தவிர வேறு வழியில்லை. இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாக இருக்கும். ஒரு பெண் ஒரு இளைஞரை காதலிப்பதில் பெற்றோருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் கூலிப்படையை வைத்து கொலை செய்யும் அளவிற்கு மனிதாபிமானம் இல்லாமல் இருப்பதை கட்டுப்படுத்த நிச்சயம் இதுபோன்ற தண்டனையை கொடுத்தே ஆகவேண்டும்
 
பாலபாரதி: எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments