அயோத்தி தீர்ப்பு எதிரொலி: கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (09:35 IST)
அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாகவிருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் குறித்த பிரச்சினையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக – கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பதட்டமான பகுதிகளில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அயோத்தி வழக்கு தீர்ப்பு இன்று காலை 10.30 மணியளவில் வெளியாக இருக்கும் நிலையில் நாடு முழுவதும் பதட்டநிலை நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments