Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு குடோன் வெடி விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு..! முதல்வர் நிவாரண தொகை அறிவிப்பு

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (16:50 IST)
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.  
 
கிருஷ்ணகிரி அருகே உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அதன் தீப்பிழம்புகள் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியதால் பட்டாசுகளில் பற்றி பெரும் விபத்து ஏற்பட்டது. 
 
இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டதாகவும் இந்த விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து உயிர் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
 
இந்த நிலையில்  பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் வைக்க அனுமதி அளித்தது எப்படி என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்  பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண தொகையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments