Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரைவருக்கு திடீர் வலிப்பு; 5 பைக்குகளை அடிச்சு தூக்கிய பஸ்! – கிருஷ்ணகிரியில் கோர விபத்து!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (12:48 IST)
கிருஷ்ணகிரியில் பேருந்து ஓட்டுனருக்கு வலிப்பு வந்ததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பைக்குகள் மீது மோதிய விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அந்த பேருந்தை பழனி என்பவர் இயக்கி வந்துள்ளார். பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் அருகே வந்தபோது டிரைவர் பழனிக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பைக்குகளை அடித்து மோதியது. இதில் சாலையோரம் நின்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக முதியவரும், டிரைவர் பழனியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் முதியவர் செல்லும் வழியிலேயே பலியான நிலையில், டிரைவர் பழனிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments