Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிக்கலா ஒதுங்கியிருந்தால்தான் ஜெயலலிதா ஆத்மா சாந்தியடையும்! – கே.பி.முனுசாமி!

Webdunia
திங்கள், 31 மே 2021 (12:51 IST)
அதிமுகவினரிடம் சசிக்கலா போனில் பேசியதாக வெளியான ஆடியோ சர்ச்சையான நிலையில் அது அதிமுகவினர் பேசியது அல்ல என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில் எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் தொடர்கிறது. இந்நிலையில் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே பூசல் நிகழ்வதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அதிமுக தொண்டர்களிடம் சசிகலா தான் மீண்டும் வந்து அதிமுகவை காப்பாற்றுவதாக பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி “அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப முயற்சிக்கிறார் சசிக்கலா. அதிமுகவினர் யாரும் அவரிடம் பேசவில்லை. அவர் அமமுகவினரிடம்தான் பேசியுள்ளார். சசிக்கலா குடும்பம் அதிமுகவிலிருந்துதான் விலகியிருந்தால்தான் ஜெயலலிதா ஆத்மா சாந்தியடையும்” என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments