Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிக்கலா ஒதுங்கியிருந்தால்தான் ஜெயலலிதா ஆத்மா சாந்தியடையும்! – கே.பி.முனுசாமி!

Webdunia
திங்கள், 31 மே 2021 (12:51 IST)
அதிமுகவினரிடம் சசிக்கலா போனில் பேசியதாக வெளியான ஆடியோ சர்ச்சையான நிலையில் அது அதிமுகவினர் பேசியது அல்ல என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில் எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் தொடர்கிறது. இந்நிலையில் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே பூசல் நிகழ்வதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அதிமுக தொண்டர்களிடம் சசிகலா தான் மீண்டும் வந்து அதிமுகவை காப்பாற்றுவதாக பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி “அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப முயற்சிக்கிறார் சசிக்கலா. அதிமுகவினர் யாரும் அவரிடம் பேசவில்லை. அவர் அமமுகவினரிடம்தான் பேசியுள்ளார். சசிக்கலா குடும்பம் அதிமுகவிலிருந்துதான் விலகியிருந்தால்தான் ஜெயலலிதா ஆத்மா சாந்தியடையும்” என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments