Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (07:47 IST)
தமிழகத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிப்படைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்தே. அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் திமுக பிரமுகர் விபி கலைராஜன் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று முன்தினம் சென்னையில் உள்ள மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டதாகவும் இதனையடுத்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
மேலும் அமைச்சர் அன்பழகன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும், உதவியாளர் இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போதிலும் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments