Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுழற்சி முறையில் கடைகள் - கோயம்பேடு சந்தையில் புதிய நெறிமுறை!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (09:58 IST)
கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று முதல் சுழற்சி முறையில் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதற்கு சில்லறை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 
 
இதனை ஏற்று, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று முதல் சுழற்சிமுறையில் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 1,800 கடைகளில், ஒற்றைப்படை எண் கொண்ட 900 கடைகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் திறக்கப்பட உள்ளது. இதேபோல், இரட்டைப்படை எண்களை கொண்ட கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments