Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுழற்சி முறையில் கடைகள் - கோயம்பேடு சந்தையில் புதிய நெறிமுறை!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (09:58 IST)
கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று முதல் சுழற்சி முறையில் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதற்கு சில்லறை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 
 
இதனை ஏற்று, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று முதல் சுழற்சிமுறையில் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 1,800 கடைகளில், ஒற்றைப்படை எண் கொண்ட 900 கடைகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் திறக்கப்பட உள்ளது. இதேபோல், இரட்டைப்படை எண்களை கொண்ட கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments