Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியிரிமை சட்டத்தை ரத்து செய்ய.. கூனாம்பட்டி மக்களே சிந்திப்பீர்! – சுயேட்சை வேட்பாளரின் சேட்டை போஸ்டர்!

Advertiesment
Tamilnadu
, புதன், 13 அக்டோபர் 2021 (11:11 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் சுயேட்சை வார்டு வேட்பாளர் ஒருவரின் போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கூனாம்பட்டி சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி வைரலாகி வருகிறது. கூனாம்பட்டி 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சின்னமுத்து என்பவர் “குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய, ஜிஎஸ்டி வரியை கட்டுப்படுத்த, ஊழலற்ற இந்தியாவை உருவாக்க” தனக்கு வாக்களிக்கும்படி போஸ்டர் ஒட்டியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் வார்டு உறுப்பினருக்கு இதையெல்லாம் செய்ய அதிகாரம் உள்ளதா? என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியூர் செல்லும் மக்கள்; இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும்!