Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 322 பேருக்கு தொற்று உறுதி!

Webdunia
திங்கள், 4 மே 2020 (12:52 IST)
தமிழகம் முழுவதும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 322 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்த பரிசோதனை நடவடிக்கைகளில் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் பணி புரிந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடையவர்களை தேடி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய பலர் கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூரில் 131 பேரும், விழுப்புரத்தில் 76 பேரும், அரியலூரில் 42 பேரும், காஞ்சிபுரத்தில் 7 பேரும், தஞ்சாவூர், பெரம்பலூர் மற்றும் திருவாரூரில் தலா ஒருவரும் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருந்த நிலையில் கொரோனா கண்டறியப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments