Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 322 பேருக்கு தொற்று உறுதி!

Webdunia
திங்கள், 4 மே 2020 (12:52 IST)
தமிழகம் முழுவதும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 322 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்த பரிசோதனை நடவடிக்கைகளில் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் பணி புரிந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடையவர்களை தேடி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய பலர் கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூரில் 131 பேரும், விழுப்புரத்தில் 76 பேரும், அரியலூரில் 42 பேரும், காஞ்சிபுரத்தில் 7 பேரும், தஞ்சாவூர், பெரம்பலூர் மற்றும் திருவாரூரில் தலா ஒருவரும் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருந்த நிலையில் கொரோனா கண்டறியப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments