Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூஸ் கைதா?

கோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூஸ் கைதா?
, ஞாயிறு, 13 ஜனவரி 2019 (13:18 IST)
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்றும், இந்த வீடியோ வெளியிட்டவர் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் கோடநாடு விவகாரத்தில் பத்திரிகையாளர் மேத்யூஸை கைது செய்ய எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படை டெல்லி விரைந்துள்ளதாகவும் எந்த நேரத்திலும் மேத்யூஸ் கைது என்ற செய்தி வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

webdunia
முன்னதாக கோடநாடு கொள்ளை தொடர்பாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் மற்றும் வீடியோவில் பேசியவர் உள்பட ஒருசிலர் மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுன்னத் முதல் இறைச்சி வரை - ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது?