Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபாலபுரத்தில் மண்டியிட்டு கதறி அழுத கே.என்.நேரு: என்னவா இருக்கும்??

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (13:51 IST)
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்று கருணாநிதி புகைப்படம் முன்பு கதறி அழுதிருக்கிறார் கே.என்.நேரு.
 
தி.மு.கவின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இதுவரை இருந்த டி.ஆர்.பாலு தற்போது அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே நாடாளுமன்ற குழுத்தலைவராக உள்ளார் என்பதால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் டி.ஆர்.பாலு வகித்து வந்த தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 
 
தற்போது திருச்சி மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளில் கே.என்.நேரு இருபப்தால் திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வேறொருவருக்கு வழங்கப்படும் என்றும் தெரிகிறது. 
 
இந்நிலையில் இன்று தனது நண்பர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்று கருணாநிதி புகைப்படம் முன்பு கதறி அழுதிருக்கிறார் கே.என்.நேரு. ஆனால், கே.என்.நேருவின் கண்ணீருக்கான காரணம் என்னவென்றுதான் அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments