Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிஷோர் கே சாமி மீண்டும் கைது: ஜூலை 7 வரை காவலில் வைக்க உத்தரவு!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (10:42 IST)
பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் சமூக வலைதள பயனாளியுமான கிஷோர் கே சாமி ஏற்கனவே இரண்டு முறை கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு முறை கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட மறைந்த தலைவர்களையும் முக ஸ்டாலின் உள்ளிட்ட தற்போதைய தலைவர்களையும் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கிஷோர் கே சாமி கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்
 
அதன்பின் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை தரக்குறைவாக பேசியதாகவும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பத்திரிக்கையாளர் ஒருவரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே நடிகை ரோகினி ஆன்லைன் மூலம் கிஷோர் கே சாமி மீது புகார் அளித்து உள்ளார் என்பதும் அந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments