கிருபானந்த வாரியார் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் தகவல்

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (21:40 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். இதனை அடுத்து கடந்த ஜனவரி 28ஆம் தேதி தைப்பூச தினம் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாள் இனி அரசு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
கிருபானந்த வாரியார் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இனிமேல் கிருபானந்த வாரியார் பிறந்த நாளான ஆகஸ்டு 25ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளது அவரது பக்தர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இதனை அடுத்து முதல்வர் பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments